skip to main |
skip to sidebar
வெண்ணிலவு விழும் என்று
காத்து கிடந்தேன்.. கடல்
கரையில்
விழுந்த தினம்..இன்றல்லோ..
நான் கடலென உணர்ந்தேன்..
அவள் காதல் என்று
சொன்ன நிமிடம்..
மாற்றம்
சிலுவைகள்
சுமக்கின்றேன் நெடும்காலமாய்
என்று அறைகூவிய
ஏழையின்
முதுகில் சிலுவையை
புதுப்பித்து ஆறுதல்
உரைத்தான் அரசானவன்....