Showing posts with label Ellorukkum vallamai kodu. Show all posts
Showing posts with label Ellorukkum vallamai kodu. Show all posts

Monday, July 21, 2008

Ellorukkum Vallamai Kodu


ஆம் நானும் இந்த
உலகின் ஜீவ ராசிகளில்
ஒருவன்தான்

உறங்கி கிடந்தேன் பத்து
மாதங்களாக தாயின் கருவறையில்
பசியறியாது

இன்று உறங்கி கிடக்கிறேன்
பசி அறிந்து பத்து
மாதங்களாய்

ஒவ்வோர் அரிசியிலும் உண்பவன்
பெயர் எழுதபட்டிருக்குமாம் என்
பெயரெங்கே

தேடி அலைந்தேன் குப்பைகளில்
வீசப்பட்ட உணவு பொட்டலங்களின்
உள்ளே

வானமெனும் கூரையின் கீழே
வாழ்க்கை பள்ளியில் வருமைபாடம்
கற்றுகொண்டிருக்கிறேன்

செவிள்கள் இல்லை ஆனாலும்
மீன்வகையை சார்தவன்தான் நீருண்டு
வாழ்கிறேன்

மனித இனத்தின் பரிணாம
வளர்ச்சி நான் காற்றிலும்
மிதக்கிறேன்

பேய் மழை சுட்டெரிக்கும்
வெய்யில் கடும் பனி
இவைஅனைத்தும்

எதிர்கொள்ள இறைவன் போர்த்திய
கருப்பு கம்பலம்தான் இக்கருநிற
தோல்

இன்று வரை அழுததில்லை
கண்ணீருக்கும் கூட கண்களில்
தண்ணீரில்லை

வயிற்றின் வார்த்தைகளும் இதயத்துடிப்பும்
கூட கேட்குமளவு செவிகள்
கூருற்றது

கதவின் இடுக்குகளிலும் இன்று
என்னால் புதுந்து செல்ல
முடியும்

என்னை படம் பிடிக்க
தினமும் வருகின்றனர் ஆயிரம்
புகைப்படக்காரர்கள்

பிதற்றுகிறார்கள் பசியின் வலி
கொடியதென்று வறுமையின் வலிமை
அறியாதவர்கள்


இன்றென்னுள்ளும் இத்தனை சக்திகள்
இவையெல்லாம் படைத்த நானுமொரு
விசித்திரநாயகன்


இறைவா எல்லோருக்கும் என்னைபோல்
வல்லமை தாராயோஎன்று இன்றும்
இறைவனை வேண்டுகிறேன் ..


இன்பம் விழையான் 'இடும்பை இயல்பு' என்பான்
துன்பம் உறுதல் இலன்.