Tuesday, June 10, 2008

Meettu Thaarungal

என்றோ நான்
மறந்துவிட்டேன் நான்

மகிழ்ந்த மணித்துளிகளை

இன்று நான்

கடிகாரத்தின் நொடி
முள் போலதான்

மற்றவரின் தேவைக்காக
என்னுடன் இருப்பவரைவிட
வேகமாக ஓடுகிறேன்

ஓட்டத்தின் வேகத்தில்

என்னை யாரும்
கண்டு கொள்வதில்லை

ஓடும் ஆற்றின்
பெருமை சிந்தும்
மழைதுளிக்கு கிடைப்பதில்லை

சிறகுகள் உள்ளதென்றெண்ணி
நிலவை பிடிக்க
பறக்கின்ற எண்ணம்

கால்களின் கீழே
உள்ள கற்களில்
இடறி விழும்போதுதான்

உண்மை அறிகிறது

உறக்கத்திலிருக்கும் மனது
எஞ்சியது கண்டு

எழுந்து நிற்கிறேன்
கண்ணீர் துடைக்க
என் கைகளில்லை


ஆறுதல் சொல்லி
தேற்ற அண்டைவீட்டு
மாமா இல்லை

அரவனைத்து அன்பு

பொழிய அன்பு
மனைவி இல்லை

இவர்கள் எல்லோரையும்
வேகத்தில் விஞ்சி

காலத்தில் தொலைந்துவிட்டேன்

தொலைந்ததும் தொலைத்ததும்
இழந்ததும் யாரோ
மீட்டுதருவர்கள் என்று


-- இன்றும் நான்

இவன்
வினோத் ச
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

7 comments:

sumathy said...

arputham....

iniya karthukkal, unmai kural..

keep going

Anonymous said...

maga....please put the english version of the same :-)

vijaya bharathi said...

Nenjai thodum arpudha varigal. Naanum ungalai pola thaan. Oda thodangivitten, therindhe.

suvarna thilak said...

kavithai meaning mattum puriyilaye.

"Its my world" said...

niceee!!!!.....enngay nan is also a good one portraying a typical software guys feeling

tamizhppiriyan said...

this one is awesome...
//
ஓடும் ஆற்றின்
பெருமை சிந்தும்
மழைதுளிக்கு கிடைப்பதில்லை
//
சிந்தனை அருமை...

அச்சம் தவிர் said...

Arumai nanbarae..
Thodarnthu Ezhudha vaazhthukal..